இன்று 10000 பிசி திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு குட்டு வாங்கிய திரைப்படம் இது. தர்க்க ரீதியாக பல குளறுபடிகள் இருந்தாலும் சும்மா பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படம். இவர்கள் காட்டிய கால கட்டத்தில் திரைப்படத்தில் வரும் உயிரினம் பல இருந்ததில்லையாம். அதைவிட துருவப் பகுதியில் வாழ்ந்து மடிந்த ம்மொத் யானைகள் பாலைவனத்தில் உலாவருகின்றன்.
கதை மிக தெளிவானது. நாகரீகம் வளர்ந்த இடத்தில் இருந்து வரும் மானிடர்கள் இவர்களின் இடத்தில் புகுந்து இவர்களை பிடித்துச் செல்கின்றார்கள். இதில் அகப்படும் தன் காதலியை காப்பாற்றும் வாலிபனின் கதையே மிகுதிக் கதை!